உள்ளூர் செய்திகள்
பிடிபட்ட மீன்களுடன் உற்சாகத்துடன் இளைஞர்கள்

மீன்பிடி திருவிழா

Published On 2022-05-07 10:13 GMT   |   Update On 2022-05-07 10:13 GMT
மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடந்தது.
மேலூர் 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளரிப்பட்டி. இது மதுரை-மேலூர் 4 வழிச்சாலையை யொட்டி அமைந்துள்ளது. வெள்ளரி கண்மாய் என்றழைக்கப்படும் இது பெரிய கண்மாய் ஆகும். இப்போது இங்கு விவசாயப்பணிகள் முடிவடைந்ததால் வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் கண்மாயில் பொதுமக்கள் மீன்கள் பிடிப்பதற்கு பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை இன்று அறிவித்திருந்தனர். 

இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் மேலூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கானமக்கள் கண்மாயை சுற்றிலும் குழுமியிருந்தனர். 

வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று காலை 6 மணியளவில் வெள்ளைத் துண்டு வீச சுற்றி இருந்த மக்கள் கண்மாய்க்குள் இறங்கினார்கள். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, கூடை மற்றும் மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். 

இதில் நாட்டு வகை மீன்களான விரால் மீன், கட்லா, கெளுத்தி, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்களை மக்கள் பிடித்துச் சென்றனர்.
Tags:    

Similar News