செய்திகள்
தஞ்சை பகுதிகளில் 12-ந்தேதி மின் நிறுத்தம்
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 12-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 12-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அண்ணாநகர் மின்பாதையில் யாகப்பாநகர், அருளானந்தநகர், அருளானந்தம்மாள் நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர் ஆகிய பகுதிகளிலும், மங்களபுரம் மின்பாதையில் கண்ணன்நகர், ராஜப்பா நகர், கணபதி நகர், டி.பி.எஸ். நகர், ஜெ.ஜெ.நகர், பாலாஜி நகர், அண்ணாமலை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.