செய்திகள்
வழக்கு பதிவு

வேட்பாளரை தாக்க முயன்ற சம்பவம்- அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த 200 பேர் மீது வழக்கு

Published On 2021-04-07 07:53 GMT   |   Update On 2021-04-07 07:53 GMT
வேட்பாளரை தாக்க முயன்ற அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை:

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நேற்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்தது.

இந்தநிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கு ஆய்வு செய்வதற்காக வந்தார்.

அப்போது அங்கு இருந்த 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் வேட்பாளரை தாக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வேட்பாளரை காப்பாற்றி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹாலன் இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News