உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவினாசியில் சட்ட விரோதமாக பார் நடத்திய 4 பேர் கைது

Published On 2021-12-02 08:35 GMT   |   Update On 2021-12-02 08:35 GMT
டாஸ்மாக் கடை அருகில் சட்டவிரோதமாக பார் நடத்தி வருவதாக அவினாசி போலீசாருக்கு புகார்கள் வந்தது.
அவினாசி:

அவினாசி புதிய பஸ் நிலையம், கால்நடை மருத்துவமனை அருகில் மொண்டிநாதம்பாளையம் பிரிவு அருகே மற்றும் கந்தம்பாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சட்டவிரோதமாக பார் நடத்தி வருவதாக அவினாசி போலீசாருக்கு புகார்கள் வந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக பார் நடத்திய சிவகங்கையை சேர்ந்த அர்ஜுனன் ( வயது 39), தஞ்சாவூரை சேர்ந்த விமல்ராஜ் (32), மற்றும் ஜெயசீலன் (29), கோவை கோவில் மேடு பகுதியை சேர்ந்த வீரபாண்டியன்(37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News