செய்திகள்
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை:
சென்னையில் அதிகாலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி-நகர், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
புரெவி புயல் எதிரொலியாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.