செய்திகள்
காஞ்சிபுரம் அருகே வாகனம் மோதி பெண் பலி
காஞ்சிபுரம் அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த நீர்வள்ளூர் ரோடு ஜங்ஷன் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நீர்வள்ளூர் கிராம நிர்வாக அதிகாரி மகாலட்சுமி காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.