உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்

Published On 2021-12-03 04:10 GMT   |   Update On 2021-12-03 04:10 GMT
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டிசம்பர் 2-வது வாரத்தில் அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டி தீர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பின. பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.  

தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 132%-க்கு மேல் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று நாளை புயலாக மாறி கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், அந்தமான் அருகே வங்கக்கடலில் டிசம்பர் 2-வது வாரத்தில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய
வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

தமிழகம் நோக்கி நகரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைய வாய்ப்பு இல்லை என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. 12 மணி நேரத்தில் ஜாவத் புயல் : தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Tags:    

Similar News