செய்திகள்
கோவையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று காலை ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது. புத்துணர்வு சிகிச்சை உள்பட பல சிகிச்சைகளை டாக்டர்கள் அவருக்கு அளிக்க உள்ளனர்.
கோவை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புத்துணர்வு சிகிச்சைக்காக அவ்வப்போது கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு வந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்வார்.
இதுவரை 7-க்கும் மேற்பட்ட முறை கோவைக்கு வந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்று சென்றுள்ளார்.
இந்த நிலையில் கோவை ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் கோவைக்கு வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு நேற்றிரவு முழுவதும் தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது. புத்துணர்வு சிகிச்சை உள்பட பல சிகிச்சைகளை டாக்டர்கள் அவருக்கு அளிக்க உள்ளனர்.
இதற்காக அவர் இன்னும் சில நாட்கள் கோவையிலேயே தங்கி இருப்பார் என தெரிகிறது. ஆனால் அவர் எத்தனை நாள் இங்கு தங்கி இருப்பார் என்பது டாக்டர்கள் இன்று சிகிச்சையை தொடங்கிய பின்பே தெரியவரும்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புத்துணர்வு சிகிச்சைக்காக அவ்வப்போது கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு வந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்வார்.
இதுவரை 7-க்கும் மேற்பட்ட முறை கோவைக்கு வந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்று சென்றுள்ளார்.
இந்த நிலையில் கோவை ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் கோவைக்கு வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு நேற்றிரவு முழுவதும் தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது. புத்துணர்வு சிகிச்சை உள்பட பல சிகிச்சைகளை டாக்டர்கள் அவருக்கு அளிக்க உள்ளனர்.
இதற்காக அவர் இன்னும் சில நாட்கள் கோவையிலேயே தங்கி இருப்பார் என தெரிகிறது. ஆனால் அவர் எத்தனை நாள் இங்கு தங்கி இருப்பார் என்பது டாக்டர்கள் இன்று சிகிச்சையை தொடங்கிய பின்பே தெரியவரும்.