செய்திகள்

காரிமங்கலம் பாலக்கோடு சாலையில் சேதமான மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

Published On 2019-05-15 16:10 GMT   |   Update On 2019-05-15 16:10 GMT
காரிமங்கலம் பாலக்கோடு சாலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சேதமான மின்கம்பத்தை மாற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பாலக்கோடு சாலையில் வணிக நிறுவனங்கள், அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் என பல அமைந்துள்ளது. இவ்வழியே உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மும்முனை மின்சார இணைப்பு தரப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்தம் செல்லும் மின்கம்பம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலத்த சேதம் அடைந்து உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்புறம் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் காண்போரை அச்சப்படுத்தி வருகிறது. 

சேதமடைந்த கம்பத்தை உடனடியாக அகற்ற இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே, சேதமடைந்த மின்கம்பம் மேலும் சேதமடைந்து பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News