செய்திகள்
கோப்புபடம்

வள்ளியூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2020-10-18 14:52 GMT   |   Update On 2020-10-18 14:52 GMT
வள்ளியூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளியூர்:

வள்ளியூர் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வள்ளியூர் அருகே குமாரபுதுக்குடியிருப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடிய அப்பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 53), வெள்ளத்துரை (60), கடற்கரையாண்டி (58), முத்துசெல்வன் (22), துரைராஜ் (59), சிவக்குமார் (57) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.150-யை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News