செய்திகள்
அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை

Published On 2020-07-12 05:58 GMT   |   Update On 2020-07-12 05:58 GMT
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து மீணடு வரவேண்டும் என தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அமிதாப் பச்சன் டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப், பூரண குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை கேட்டதும் மிகவும் துயரமடைந்தேன். அவர் வலிமை பெறவும் மற்றும் விரைவாக குணமடையவும் பிரார்த்திக்கிறேன். தயது செய்து விரைவில் குணமடையுங்கள் ’’ என பதிவிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘‘Sir, நீங்கள் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். உங்களுடன் கோடிக்கணக்கான பிரார்த்தனைகள் உள்ளன’’ எனப்பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வ் தேவேந்திர பட்நாவிஸ் ‘‘விரைவாக குணமடைய நாங்கள் வாழ்த்துகிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் டொலிபோன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
Tags:    

Similar News