செய்திகள்
சோளிங்கரில் முழு ஊரடங்கை மீறி வாகனத்தில் சுற்றியவர்களுக்கு அபராதம்
முழு ஊரங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு சோளிங்கர் போலீசார் அபராதம் விதித்தனர்.
சோளிங்கர்:
சோளிங்கரில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. முழு ஊரங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு சோளிங்கர் போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது போலீசார், கொரோனா பரவல் குறித்து கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், ஊரடங்கு நேரத்தில் யாரும் வெளியில் வரக்கூடாது, தடையை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தனர்.