செய்திகள்
கைது

பழனி அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-10-23 11:43 GMT   |   Update On 2021-10-23 11:43 GMT
பழனி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:

பழனி அடிவாரம் போலீசார், கொடைக்கானல் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஆயக்குடி அருகே உள்ள அமரபூண்டியை சேர்ந்த முருகன் (வயது 55) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News