ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு மேலும் ஒரு நாள் தடை

Published On 2021-08-10 06:31 GMT   |   Update On 2021-08-10 06:31 GMT
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 'காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு' நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கடந்த 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நெல்லையப்பர் கோவில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், பாபநாசம் பாபநாசநாதர் கோவில் ஆகியவற்றில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதித்திருந்தார்.

இந்த நிலையில் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த மேலும் 1 நாள், அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) தடை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 'காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு' நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பக்தர்கள் இன்றி விழா நிகழ்ச்சி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News