தொழில்நுட்பம்
ஏர்டெல்

ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகை விலை உயர்வு

Published On 2020-02-18 05:55 GMT   |   Update On 2020-02-18 05:55 GMT
ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெயிட் இணைப்பில் ஆட் ஆன் கனெக்‌ஷன் சலுகைக்கான விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.



ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகையை அறிமுகம் செய்தது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது சலுகையிலேயே குடும்பத்தாரை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இரண்டாவது இணைப்பாக சேர்த்து கொள்ள முடியும்.

ஏர்டெல் ஆட் ஆன் சலுகை துவக்க விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் விலை உயர்வை அடுத்து இதன் விலை ரூ. 249 என மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



போஸ்ட்பெயிட் இணைப்பினை பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர் தங்களது குடும்பத்தார் அல்லது நண்பரை தங்களது சலுகையில் சற்றே குறைந்த விலையில் இணைத்துக் கொள்ள முடியும். அதாவது ரூ. 499 மாத சலுகையை பயன்படுத்துவோர் தங்களது நண்பரை அதே சலுகையில் இணைக்கும் போது இரண்டாவது இணைப்பிற்கு ரூ. 249 மட்டும் செலுத்தினால் போதும்.

ஏர்டெல் ஆட் ஆன் சலுகையின் விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இதற்கான கட்டணம் ரூ. 249 என மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர டேட்டாவுக்கு மட்டும் ரூ. 99 விலையில் ஆட் ஆன் சலுகையை ஏர்டெல் வழங்கி வருகிறது.
Tags:    

Similar News