செய்திகள்
பாட்னாவில் இண்டிகோ மானேஜர் சுட்டுக்கொலை
பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று இண்டிகோ மானேஜர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இண்டிகோ அலுவலகத்தில் மானேஜராக வேலைப்பார்த்து வந்தவர் ரூபேஷ். இவர் புனைசாக் பகுதியில் உள்ள அவரது வீடு உள்ள அப்பார்ட்மென்ட் முன் காருக்குள் இருந்துள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரூபேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.