செய்திகள்
கொரோனாவால் உயிரிழப்பு- மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் 34 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க, ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.