செய்திகள்
உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை

2 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை

Published On 2019-08-19 17:49 GMT   |   Update On 2019-08-19 17:49 GMT
கோவில்களின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
வரதராஜன்பேட்டை:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் ஆண்டிமடம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பச்சைஅம்மன் கோவில் உண்டியலையும் உடைத்து மர்ம நபர்கள் அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News