கார்
டொயோட்டா கார்

விலை உயர்த்தும் நிறுவனங்கள் பட்டியலில் இணைந்த டொயோட்டா

Published On 2021-12-16 08:18 GMT   |   Update On 2021-12-16 08:18 GMT
டொயோட்டா நிறுவனமும் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டாவும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதையே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவித்துள்ளன.

சமீப மாதங்களில் டொயோட்டா நிறுவனம் சில புது மாடல்கள் மற்றும் பேஸ்லிப்ட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதுதவிர சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி சிறிய மற்றும் எஸ்.யு.வி. மாடல்களை பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி மற்றும் வினியோக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதே நிலை அடுத்த ஆண்டும் தொடரும் என கூறப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு சமீபத்திய பண்டிகை கால விற்பனை மோசமாக நடைபெற்றது என ஆட்டோமொபைல் டீலர் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News