செய்திகள்
தற்கொலை

குழந்தை இல்லாததால் விரக்தி: தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2021-01-03 11:14 GMT   |   Update On 2021-01-03 11:14 GMT
திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தி அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புவனம்:

திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது பி.வேலாங்குளம்.இந்த பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பவித்ரா (வயது 21).இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றது. குழந்தை இல்லாததால் பவித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். 

இதைக் கேள்விப்பட்ட பவித்ராவின் தந்தை பழனிக்குமார் தனது உறவினர் வீட்டில் மகளை தங்க வைத்துள்ளார். அங்கு பவித்ரா கழிவறைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர் அங்கு சென்று பார்த்த போது பவித்ரா துப்பட்டாவால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். பதறிய உறவினர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News