செய்திகள்
விபத்து

தவளக்குப்பத்தில் மினி லாரி மோதி மீன் விற்கும் பெண் பலி

Published On 2019-11-28 13:14 GMT   |   Update On 2019-11-28 13:14 GMT
தவளக்குப்பத்தில் இன்று அதிகாலை மினி லாரி மோதி மீன் விற்கும் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாகூர்:

தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். மீனவர். இவரது மனைவி சரோஜா (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. சரோஜா தினமும் காலை புதுவையில் இருந்து மொத்தமாக மீன் வாங்கி வந்து தவளக்குப்பம் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம். 

அதுபோல் இன்று அதிகாலை மீன் வாங்க சரோஜா மற்றும் அதே பகுதியை சேர்ந்த வனிதா உள்ளிட்ட 3 பேர் நல்லவாடு கிராமத்தில் இருந்து ஆட்டோவில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்புக்கு வந்தனர். அப்போது சரோஜா சாலையை கடக்க முயன்ற போது கடலூரில் இருந்து புதுவை நோக்கி சென்ற மினி லாரி எதிர்பாராத விதமாக சரோஜா மீது மோதி விட்டு நிற்காமல் அதிவேகமாக சென்று விட்டது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சரோஜா பரிதாபமாக இறந்து போனார். 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து சரோஜா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மினி லாரி டிரைவரை பிடிக்க அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News