செய்திகள்
சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தில் பஸ்நிறுத்தம் அருகே கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தில் பஸ்நிறுத்தம் அருகே கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார ஆய்வாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர் விஷ்ணுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் லியோ தலைமையிலான மருத்துவ குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். முகாமில் கொரோனா பரிசோதனை செய்தும், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. மேலும் முகாமிற்கு வந்த 45 வயதுக்கு மேற்பட்ட 50 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது.