செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கொரோனா

Published On 2020-11-21 09:48 GMT   |   Update On 2020-11-21 09:48 GMT
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 690-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த 78 வயது ஆண் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்று பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 204-ஆக உள்ளது. இதில் 45 பெண்கள் அடங்குவர்.
Tags:    

Similar News