செய்திகள்
அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிப்பு
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீட்டித்து வருகின்றன.
கவுகாத்தி:
அரியானா மாநிலத்தில் முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கை ஜூன் 21-ம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் நீட்டித்து அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மளிகை உள்ளிட்ட கடைகள் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களில் 21 பேருக்கு மிகாமல் பங்கேற்கக் கூடாது. தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தில் முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கை ஜூன் 21-ம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் நீட்டித்து அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மளிகை உள்ளிட்ட கடைகள் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களில் 21 பேருக்கு மிகாமல் பங்கேற்கக் கூடாது. தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.