உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

செங்கம் அருகே சாலையோர பள்ளத்தில் புகுந்த அரசு பஸ்

Published On 2022-04-16 09:51 GMT   |   Update On 2022-04-16 09:51 GMT
செங்கம் அருகே சாலையோர பள்ளத்தில் புகுந்து அரசு பஸ் விபத்துக்குள்ளானது.
செங்கம்:

செங்கம் அடுத்துள்ள விண்ணவனூர் அருகே அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் கட்டுப்பட்டை இழந்த பஸ்  நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். 

இது குறித்த தகவல் அறிந்த பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த வர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News