உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே ஏரியை உடைத்ததாக 4 பேர் கைது
ஓசூர் அருகே ஏரியை உடைத்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சிக்குட்பட்ட சோமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை உடைத்ததாக, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி, ஒன்னல்வாடி ஊராட்சி தலைவர் மாதேஷ் ஆகியோர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓசூர் கோகுல் நகர் மகாராஜா அவுட் பகுதியை சேர்ந்த சிவா (வயது31), வினோத் (38), சிவகுமார் (42), பாலக்கோடு அருகே பூதிப்பட்டியை சேர்ந்த பெருமாள் (61) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.