செய்திகள்

தமிழக கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை நீட்டிப்பு

Published On 2018-05-03 09:47 GMT   |   Update On 2018-05-03 09:47 GMT
தமிழக கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை திங்கட்கிழமை வரை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது. #CoOperativeSocieties #SC
புதுடெல்லி:

தமிழ்நாட்டில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இரு கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை  விசாரித்த சுப்ரீம் கோர்ட், மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதித்து, கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்த உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தனர்.

மேலும், இரு தரப்பும் தேர்தல் தொடர்பான நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். தேர்தல் முடிவுகளை வெளியிட பிறப்பித்த தடை உத்தரவும் திங்கள் கிழமை வரை நீட்டிக்கப்பட்டது. #CoOperativeSocieties #SC
Tags:    

Similar News