உள்ளூர் செய்திகள்
மரணம்

தென்காசியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் திடீர் பலி

Published On 2022-04-15 05:34 GMT   |   Update On 2022-04-15 05:34 GMT
தென்காசியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் மணி ஞானசேகர்(வயது 56). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

நேற்று தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு தொழில் வி‌ஷயமாக அவர் சக புரோக்கர்கள் 2 பேருடன் காரில் வந்துள்ளார். புளியங்குடிக்கு வந்தபோது நெஞ்சு வலிப்பதாக கூறிய அவருக்கு, அங்குள்ள ஆஸ்பத்திரியில் ஊசி போட்டுள்னர்.

பின்னர் குத்துக்கல்வலசை வழியாக தென்காசிக்கு காரில் புறப்பட்டு சென்றபோது மணிஞானசேகர் திடீரென காரில் மயங்கி விழுந்தார். அவரை காரில் வந்தவர்கள் சாப்பிட எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை.

உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News