செய்திகள்
கைது

மதுரையில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 63,444 பேர் கைது

Published On 2020-09-14 09:38 GMT   |   Update On 2020-09-14 09:38 GMT
மதுரை மாவட்டத்தில் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இதுவரை 48,799 வழக்குகள் பதிவு செய்து சம்பந்தப்பட்ட 63,444 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 13,073 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவுப்படி இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இதுவரை 48,799 வழக்குகள் பதிவு செய்து சம்பந்தப்பட்ட 63,444 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 13,073 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விதி மீறல்களை தடுக்கும் வகையில் காவல் துறை அதிகாரிகள் மூலம் மதுரை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடை பிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News