செய்திகள்
கைது

அய்யம்பேட்டை அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2019-07-17 10:28 GMT   |   Update On 2019-07-17 10:28 GMT
அய்யம்பேட்டை அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 52). சம்பவத்தன்று இரவு இவரும் இவருடைய குடும்பத்தினரும் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த இரண்டரை பவுன் நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து புருஷோத்தமன் அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பசுபதிகோவில் புள்ளமங்கை கோவில் தெருவை சேர்ந்த முனியன் மகன் சித்ரகுமார் (வயது 28) என்பதும், மற்றொருவர் மாத்தூர் பட்டித்தோப்பு லிங்கத்தடி மேடு அங்கப்பன் மகன் மணி (வயது 35) என்பதும் தெரியவந்தது. விசாரணையில் புருஷோத்தமன் வீட்டில் நகைகளை திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News