செய்திகள்
அரிவாள் வெட்டு

மணல்மேடு அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

Published On 2021-09-29 13:41 GMT   |   Update On 2021-09-29 13:41 GMT
மணல்மேடு அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:

மணல்மேடு அருகே உத்தண்டராயன்பேட்டையை சேர்ந்தவர் நமச்சிவாயம் மகன் சந்திரன் (வயது 35). விவசாய கூலித் தொழிலாளி. இவர் வீட்டின் அருகில் வசித்து வருபவர் சின்னத்தம்பி மகன் சாமிநாதன். இவரது வீட்டு சாக்கடை தண்ணீர் சந்திரன் வீட்டு வாசலில் ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரன் கேட்டுள்ளார். இதனால் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சாமிநாதன் தான் வைத்திருந்த அரிவாளால் சந்திரனை வெட்டினார். இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News