செய்திகள்
வேதாரண்யம் பகுதியில் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் முதியவர்
வேதாரண்யம் பகுதியில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கலையை இலவசமாக முதியவர் ஒருவர் கற்றுத்தருகிறார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தை சேர்ந்தவர் கோபால் (வயது65). இவர் பிறந்த தினத்தன்று புயல் வீசியதால் இவரை அந்த பகுதி மக்கள் புயல் கோபால் என்று அழை த்து வருகின்றனர். சிலம்பம் கலையில் கைதேர்ந்த இவர் பல்ேவறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பாட்டம் அழிந்து விடாமல் பாதுகாக்க கோபால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் இலவசமாக 10 ஆண்டுகளாக கற்றுக்கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து கோபால் கூறியதாவது:-
தற்போது இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க இளைஞர்களுக்கு சிலப்பாட்டத்தை கற்று கொடுத்து வருகிறேன். தங்களை பாதுகாத்து கொள்ள பெண்களுக்கும் இந்த கலையை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன். பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் சிலம்பம் கற்று கொள்ள வருகின்றனர் என்றார்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் அழிந்து விடாமல் மாணவ-மாணவிகளுக்கு மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுத்தரும் கோபாலை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.