செய்திகள்
மேலூர் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
மேலூர் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர் களுக்குள் பிரச்சினை ஏற்பட, விரக்தியடைந்த கவிதா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று ராஜா மது குடித்துவிட்டு வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை நீண்ட நேரமாகியும் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டுக் குள் சென்று பார்த்த போது ராஜா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
மேலவளவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் கைரே கைகள் சேகரிக்கப்பட்டன.
ராஜாவை கொலை செய்தது யார்? முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர் களுக்குள் பிரச்சினை ஏற்பட, விரக்தியடைந்த கவிதா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று ராஜா மது குடித்துவிட்டு வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை நீண்ட நேரமாகியும் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டுக் குள் சென்று பார்த்த போது ராஜா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
மேலவளவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் கைரே கைகள் சேகரிக்கப்பட்டன.
ராஜாவை கொலை செய்தது யார்? முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.