உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரியில் 1 வயது பெண் குழந்தை சாவு

Published On 2022-04-17 07:31 GMT   |   Update On 2022-04-17 07:31 GMT
கிருஷ்ணகிரியில் 1 வயது பெண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 24). இவரது மகள் அஸ்வினி (1).
இந்த நிலையில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News