ஆன்மிகம்
மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: பழனியில் சொர்ணரத ஊர்வலம்
பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் சொர்ணரத ஊர்வலம் நடைபெற்றது. வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில், நேற்று சொர்ணரத ஊர்வலம் நடைபெற்றது. வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அம்மன் சிலை வைக்கப்பட்ட டிராக்டர் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
அந்த ரதமானது அடிவாரம் பாதவிநாயகர் கோவிலில் இருந்து தொடங்கி சன்னதிவீதி, பஸ்நிலையம், மார்க்கெட் ரோடு, 4 ரதவீதிகள் வழியே ஊர்வலமாக சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தது. வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
அந்த ரதமானது அடிவாரம் பாதவிநாயகர் கோவிலில் இருந்து தொடங்கி சன்னதிவீதி, பஸ்நிலையம், மார்க்கெட் ரோடு, 4 ரதவீதிகள் வழியே ஊர்வலமாக சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தது. வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.