செய்திகள்
கைது

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சி- 6 பேர் கைது

Published On 2021-11-23 09:07 GMT   |   Update On 2021-11-23 09:07 GMT
காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை, சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கீழ்கதிர்பூரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மணிகண்டனை மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனை மர்ம கும்பல் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரை வெட்டியது செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த சதீஷ், கரையாஞ்சாவடியை சேர்ந்த இமானுவேல், பாலாஜி ராஜா, பிரவீன், ஜெகன்ராஜ், மதியழகன் ஆகியோர் என்பது தெரிந்தது.

அவர்கள் 6 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.

Tags:    

Similar News