ஆன்மிகம்
திருபுவனத்தில் பவளக்காளி- பச்சைக்காளி திருநடனம்

திருபுவனத்தில் பவளக்காளி- பச்சைக்காளி திருநடனம்

Published On 2021-03-16 05:19 GMT   |   Update On 2021-03-16 05:19 GMT
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் வீரமாகாளியம்மன் கோவிலில் பச்சைக்காளி-பவளக்காளி திருநடனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தன

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கடந்த 7-ந்தேதி திருநடன விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கடந்த 10-ந்தேதி பவளக்காளி வீதிஉலா நடந்தது. அப்போது திருபுவனத்தில் பவளக்காளிக்கு மாவிளக்கு படைத்து அர்ச்சனை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

இந்தநிலையில் நேற்று பச்சைக்காளி-பவளக்காளி திருநடனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.
Tags:    

Similar News