செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அர்பிதா கோஷ் ராஜினாமா
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வந்த அர்பிதா கோஷ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் அர்பிதா கோஷ். இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் ஏற்றுக்கொண்டார்.
கடந்த மாநிலங்களவை தொடரின்போது, மேலவை மரபை மீறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.