செய்திகள்
தாராபுரம் அருகே லாரி மோதி வாலிபர் பலி
தாராபுரம் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் நேற்று மாலை தாராபுரத்தில் இருந்து 6 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் உடுமலை சாலையில் கொண்டரசம் பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கொண்டரசம்பாளையம் அருகே உடுமலையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சரக்கு லாரி மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.