உள்ளூர் செய்திகள்
ஆற்காட்டில் வேனில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது
ஆற்காட்டில் வேனில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆற்காடு கணபதி நகர் பகுதியில் மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் இரண்டரை டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. அதை தொடர்ந்து அரிசியுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மற்றும் வேனை வேலூர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.