செய்திகள்
அதியமான்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை
அதியமான்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 43). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். சம்பவத்தன்று சிவராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிவராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.