செய்திகள்
சின்ன காலாப்பட்டில் குளவி கொட்டியதில் மூதாட்டி பலி
சின்ன காலாப்பட்டில் குளவி கொட்டியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்து போனார்.
சேதராப்பட்டு:
புதுவை சின்னகாலாப்பட்டு குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 72). இவர், நேற்று வீட்டு தோட்டத்தில் விறகுகளை எடுக்க சென்றார். அப்போது அங்கு கூடு கட்டி இருந்த விஷக்குளவிகள் மகேஸ்வரியை விரட்டி, விரட்டி கொட்டியது. இதனால் வலியால் மகேஸ்வரி அலறினார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மகேஸ்வரியை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மகேஸ்வரி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.