ஆன்மிகம்
வீட்டில் பூஜை

எண்வகை விரதங்களும்... அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்களும்

Published On 2021-01-02 03:05 GMT   |   Update On 2021-01-02 03:05 GMT
விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும்.
இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். 

விரதம் என்பது ஒரு வகையான விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும். 

எண்வகை விரதங்கள்

சந்தாபண விரதம்
மஹாசந்தாபண விரதம்
பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்
அதிகிரிச்சா விரதம்
பராக விரதம்
தப்த கிரிச்சா விரதம்
பதகிரிச்ச விரதம்
சாந்தாராயன விரதம்
Tags:    

Similar News