ஆன்மிகம்
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும் நிறைநாழி படிஅரிசியை படத்தில் காணலாம்.

சிவன்மலைகோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைநாழி படிஅரிசி வைத்து பூஜை

Published On 2020-09-16 02:47 GMT   |   Update On 2020-09-16 02:47 GMT
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைநாழி படி அரிசி வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவில் சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப்பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது.

நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி வரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. வேறு ஒரு பக்தரின் கனவில் அடுத்த பொருள் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்டபோது நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்டபோது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டபோது சுனாமி ஏற்பட்டு வெள்ளத்தால் ஏராளமானோர் மடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் ஏதாவது ஒருவகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, முத்தூர் வேலம்பாளையத்தை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 34) என்ற பக்தரின் கனவில் உத்தரவான நிறைநாழி படிஅரிசி நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. அப்போது, பக்தர்கள் தரப்பில் சிவன்மலை ஆண்டவன் உத்தரவான பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்று விடும்.

நிறைநாழி படிஅரிசி வைத்து பூஜிக்கப்படுவதால் விவசாயம் செழிக்கும். அதே சமயத்தில் சுப காரியங்கள் அதிகரிக்கும், விவசாயிகளுக்கு நிறைவானதாக இருக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Tags:    

Similar News