செய்திகள்
உச்ச நீதிமன்றம்

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை- தி.மு.க.வின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

Published On 2019-10-14 05:37 GMT   |   Update On 2019-10-14 05:37 GMT
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு தொடர்பாக திமுக முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
புதுடெல்லி:

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது, மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். அதேசமயம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட 23-ம் தேதிவரை இடைக்கால தடை விதித்தனர்.

மேலும் இன்பதுரையின் மனு தொடர்பாக திமுக வேட்பாளர் அப்பாவு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



இந்நிலையில் ஒருவார காலம் விடுமுறை முடிந்து இன்று காலை உச்ச நீதிமன்றம் செயல்பட தொடங்கியது. அப்போது, அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், இன்பதுரையின் மனுவை விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

உச்ச நீதிமன்றம் கைவிரித்ததால், இடைத்தேர்தல் முடிவுகளோடு ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News