செய்திகள்
மர்மமரணம்

திருவொற்றியூரில் பெண் மர்மமரணம்- கணவரிடம் விசாரணை

Published On 2019-11-05 07:39 GMT   |   Update On 2019-11-05 07:39 GMT
திருவொற்றியூரில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரில் வசித்து வருபவர் ஏழுமலை கண்டெய்னர் லாரி உரிமையாளர்.

இவரது மனைவி வனிதா (வயது 32). நேற்று முன்தினம் வனிதா திடீரென வீட்டில் உயிரிழந்தார். உடனடியாக அவரது உடலை ஏழுமலை ஆம்புலன்ஸ் மூலம் தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் என்ற கிராமத்திற்கு எடுத்துச் சென்றார்.

அங்கு உறவினர்கள் கேட்டபோது வனிதா உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறினார். இதில் சந்தேகம் அடைந்த வனிதாவின் தந்தை குப்புசாமி திருவண்ணாமலை போலீசில் புகார் செய்தார். அதில், மகள் வனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இதுபற்றி திருவண்ணாமலை போலீசார் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு அனுப்பி வைத்தனர்.

திருவொற்றியூர் போலீசார் வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வனிதாவின் கணவர் ஏழுமலையிடம் விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News