செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் 1-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Published On 2021-08-23 09:02 GMT   |   Update On 2021-08-23 09:02 GMT
புதுச்சேரியில் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் இன்று 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. இதனைத்தொடர்ந்து வருகிற 1-ந்தேதியில் இருந்து புதுச்சேரி மாநிலத்திலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News