ஆட்டோமொபைல்
டாடா டியாகோ

உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா டியாகோ

Published On 2020-09-23 09:49 GMT   |   Update On 2020-09-23 09:49 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடலின் 3 லட்சத்து யூனிட்டை வெளியிட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சனந்த் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

இம்பேக்ட் டிசைன் கொண்டு உருவான முதல் மாடலாக டாடா டியாகோ வெளியிடப்பட்டது. இந்த மாடலில் பல்வேறு முதல்முறை அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தன. மேலும் குளோபல் என்கேப்-இன் பாதுகாப்பு தரத்தில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றது.



இந்த ஆண்டு துவக்கத்தில் டாடா மோட்டார்ஸ் டியாகோ பிஎஸ்6 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதல் பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின், புதிய காஸ்மெடிக் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் டியாகோ பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் புதிய கிரில் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது.

டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News