செய்திகள்
ஆபத்தான பள்ளம்.

உடுமலையில் ஆபத்தான பள்ளத்தால் விபத்து அபாயம்

Published On 2021-11-27 09:01 GMT   |   Update On 2021-11-27 09:01 GMT
இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியது உள்ளது.
உடுமலை:

உடுமலை பஸ் நிலையம்  கீழ்புறம் ஐஸ்வர்யா நகர் செல்லும் வழியில் சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. பொதுமக்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த வழியே செல்லும் போது பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்ற பலர் கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது மழையில் பள்ளம் பெரிதாகி உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியது உள்ளது.

ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வரும் நிலையில் உயிர் பலி ஏற்படும் முன் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இதை  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News