செய்திகள்
கோப்புபடம்

மது குடித்த போது தகராறு: 3 பேர் மீது வழக்கு

Published On 2021-01-16 11:27 GMT   |   Update On 2021-01-16 11:27 GMT
விருதுநகர் அருகே மது குடித்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் மது கூடத்தில் சின்னதாதம் பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 34), அவரது உறவினர் பவானந்தன் (24) ஆகிய 2 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தபோது சூலக்கரை தெற்கு தெருவைச் சேர்ந்த 3 பேர் உடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரையும் பாட்டிலால் தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News